தேவையான பொருட்கள்
நெத்தலிக்கருவாடு -250 கிராம்
கடலை மா -3 தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்)சாறு-அரைதேக்கரண்டி
இஞ்சி அரைத்தவிழுது -அரை தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)விழுது -அரைதேக்கரண்டி
பச்சை மிளகாய் (அரைத்தவிழுது)-2
செத்தல் (காய்ந்த)மிளகாய் (அரைத்தவிழுது)-7
மஞ்சள்தூள் -கால் தேக்கரண்டி
உப்பு -தேவையானளவு
எண்ணெய் -தேவையானளவு
செய்முறை
1)ஓரு பாத்திரத்தில் நெத்தலிகருவாட்டை போட்டு
அதன் தலைப்பகுதியை அகற்றிய பின்பு அதனுடன்
தண்ணீர் விட்டு அதிலுள்ள மண்ணை அகற்றி
நன்றாக சுத்தம் செய்யவும்.
(2)சுத்தம் செய்த பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
போடாவும்.
(3)பின்பு அதனுடன் தேசிக்காய்(எலுமிச்சம்)
சாற்றினை பிழிந்து விடவும் பின்பு கடலைமா,
இஞ்சி அரைத்தவிழுது, உள்ளி(பூண்டு)அரைத்த
விழுது, பச்சை மிளகாய்அரைத்த விழுது, செத்தல்
(காய்ந்த)மிளகாய்(அரைத்த விழுது)மஞ்சள்தூள்
உப்பு ஆகிய வற்றை போட்டு நன்றாக கலக்கவும் .
(4)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு
சூடாக்கிய பின்பு கலந்து வைத்துள்ளவற்றை
கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கவும் .
(5)இவை எல்லாவற்றையும் பொரித்தபின்பு
சுவையான சுத்தமான செய்வதிற்கு இலகுவான
நெத்தலி -65 தயாராகி விடும்.
(6)இதனை இதனை சோற்றுடன்(சாதத்துடன்)
அல்லது தனியாகவோ பரிமாறலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.